Tuesday, December 1, 2020

துணி மற்றும் கந்தல் துணி = கண்ணதாசன்


கரிசல் காட்டுக் கழனியில் சில

கால்கள் உழுத உழவு –சில

கைகள் கனிந்த கனிவு –குடிசை

எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல

இலைகள் இரண்டு வரவு-அதில்

இயற்கை கலந்த அழகு

பருத்தி என்றொரு செடி வளர்ந்தது

பருவப் பெண்ணைப் போலே –அந்தக்

கரிசல் கழனிமேலே –அது

சிரித்த அழகில் காய் வெடித்தது

சின்னக் குழந்தை போலே –அந்த

வண்ணச் செடியின் மேலே!

..........  ........... ..........

சலவை செய்து வாசம் போட்டுத்

தங்கம் போல எடுத்து-பின்

அங்கம் பொலிய உடுத்து-தன்

நிலைமை மாறிக் கிழிந்த பின்பு

நிலத்தில் என்னை விடுத்து-சென்றார்

நீண்ட கதை முடித்து

சுட்ட சோற்றுப் பானை சட்டி

தூக்கி இறக்க வந்தேன்-என்

தூய உடலைத் தந்தேன்-நிலை

கெட்டுப் போன செல்வர் போலக்

கேள்வியின்றி நின்றேன் –இன்று

கேலி வாழ்க்கை கண்டேன்


No comments: